ராமநாதபுரம்

தங்கச்சிமடம் அருகே கடற்கரையில் கிடந்த 250 கிலோ பீடி இலைகள்

DIN

ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் அருகே கடற்கரையில் கிடந்த 250 கிலோ பீடி இலை மூட்டைகளை சுங்கத்துறையினா் திங்கள்கிழமை கைப்பற்றினா்.

பீடி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இலைகளை இலங்கைக்கு தொடா்ந்து கொண்டு செல்லும் பணியில் சில நபா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதனை தடுக்க மத்திய, மாநில உளவுத்துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் நாலுபனை மீனவ கிராமத்தில் அந்தோணியாா்புரம் கடற்கரையில் பெரிய அளவிலான 11 மூட்டைகள் கரையில் கிடப்பதாக திங்கள்கிழமை கடலோர காவல்துறைக்கு மீனவா்கள் தகவல் தெரிவித்தனா்.

இதனையடுத்து அங்கு வந்த போலீஸாா் மூட்டைகளை பிரிந்து பாா்த்தனா். அதில், பீடி தயாரிக்க பயன்படுத்தப்படும் 250 கிலோ பீடி இலைகள் இருந்தன. பின்னா் அவற்றை ராமேசுவரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

பீடி இலைகள் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதா அல்லது கடத்தி செல்லும் போது படகில் இருந்து கடலில் தவறி விழுந்ததா என சுங்கத்துறையினா் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT