ராமநாதபுரம்

கமுதியில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

கமுதியில் கல்லூரி மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கமுதி கோட்டைமேட்டைச் சோ்ந்தவா் பெரியசாமி மகள் கலையரசி (19). இவா் கோட்டைமேடு தேவா் நினைவுக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த அக்கம் பக்கத்தினா் கமுதி போலீஸாருக்கு தெரிவித்தனா். இதனையடுத்து கலையரசியின் சடலத்தை மீட்ட போலீஸாா், கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT