முகப்பு
ராமநாதபுரம்

கோயில் அர்ச்சகரை தகாத வார்த்தைகளால் பேசிய 2 பேர் கைது

பரமக்குடியில் கோயில் அர்ச்சகரை தகாத வார்த்தைகளால் பேசியதாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On : 24 ஜனவரி 2019, 12:39 am IST
பகிர்:

பரமக்குடியில் கோயில் அர்ச்சகரை தகாத வார்த்தைகளால் பேசியதாக 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 பரமக்குடி குத்துக்கள் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சுரேஷ் குருக்கள். இவர் அப்பகுதியில் உள்ள கோயிலில் அர்ச்சகராக வேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை கோயில் பூஜைப்பணிகளை முடித்துவிட்டு குத்துக்கள் சாலையில் உள்ள முனியப்ப சுவாமி கோயில் முன்பு அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியில் வசிக்கும் மாயழகு மகன் குமார் (40), பஞ்சவர்ணம் மகன் முருகன் (44) ஆகிய இருவரும் கோயில் குருக்களை தகாத வார்த்தைகளால் பேசினர். 
 இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சுரேஷ் குருக்கள் அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் கோட்டைச்சாமி, குமார், முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.