பரமக்குடியில் வள்ளலார் தைப்பூச ஜோதி வழிபாட்டு பெருவிழா
பரமக்குடி வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில், வள்ளலார் தைப்பூச ஜோதி வழிபாடு மற்றும் மத நல்லிணக்க
பரமக்குடி வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில், வள்ளலார் தைப்பூச ஜோதி வழிபாடு மற்றும் மத நல்லிணக்க ஒருமைப்பாடு அன்னதான பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை, காவல் துணைக் கண்காணிப்பாளர் ரா. சங்கர் மதநல்லிணக்க சன்மார்க்க கொடியினை ஏற்றி தொடக்கி வைத்தார்.
ராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கி பாலகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றினார். வாணி கருப்பணசுவாமி பூசாரி சிவக்குமார் தலைமை வகித்தார். காவல் சார்பு-ஆய்வாளர் கருணாநிதி, தொழிலதிபர் கே.வி.எஸ். பாண்டியன், பா.ஜ.க. மண்டலப் பொறுப்பாளர் கே. சண்முகராஜ், இமானுவேல் சேகரன் பேரவை மாநிலச் செயலர் கே. சந்திரபோஸ், எமனேசுவரம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஏ.ஜே. ஆலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்குரைஞர்கள் சி. பசுமலை, லிங்கமூர்த்தி ஆகியோர் மத நல்லிணக்கம் குறித்து பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, ஓம் சக்தி மன்றத் தலைவி மல்லிகா, ராசு, சன்மார்க்க சங்க பொருளாளர் சுப்புலெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். அன்னதானம் நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.