ராமநாதபுரம்

காத்தாகுளம் கருங்காளி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

முதுகுளத்தூர் அருகே உள்ள காத்தாகுளம் கருங்காளி அம்மன் கோயில், செண்பூ கூத்த அய்யனார் கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

முதுகுளத்தூர் அருகே உள்ள காத்தாகுளம் கருங்காளி அம்மன் கோயில், செண்பூ கூத்த அய்யனார் கோயிலில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழா அதிகாலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. காலை 8 மணிக்கு அனுக்ஞை, லெட்சுமி பூஜை, விநாயகர் வழிபாடு, கோமாதா பூஜை,  61 பந்தி 21 பரிவார தேவதைகளுக்கும் 11 மணிக்கு புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் வருஷாபிஷேகம் செய்தனர். இதைத்தொடர்ந்து கருங்காளி அம்மன், செண்பூ கூத்த அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவுக்கு கிராம தலைவர் லெட்சுமணன் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ், காவல் ஆய்வாளர் எஸ்.வடிவேல் முருகன், கிராம நிர்வாக கமிட்டி பொறுப்பாளர்கள் எஸ்.ராமலிங்கம், என்.மலைச்சாமி, வி.கந்தசாமி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகையில் ரூ.2.78 கோடியில் வளா்ச்சிப் பணி: மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பு

சேந்தமங்கலம் வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் நாளை மின்தடை

திருத்தங்கலில் இன்றும் ராஜபாளையத்தில் நாளையும் மின்தடை

சாலைக்கிராமம் பகுதியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT