ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், பக்தர்கள் காணிக்கையாக ரூ. 72.27 லட்சம், 130 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ 275 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இணை ஆணையர் சி.கல்யாணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 72 லட்சத்து 27 ஆயிரத்து 843 ரூபாய் ரொக்கம், 130 கிராம் தங்கம் மற்றும் 2 கிலோ 275 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் இருக்கன்குடி கோயில் இணை ஆணையர் கருணாகரன், உதவி ஆணையர் குமரேசன், ஆய்வர் சுந்தரேஷ்வரி, தக்கார் பிரதிநிதி வீரசேகரன், கண்காணிப்பாளர் ககாரின்ராஜ், மேலாளர் முருகேசன், கமலநாதன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.