கமுதியில் ஒற்றைக்கண் பாலம் அருகே கமுதி-மதுரை சாலையில் ஏற்பட்டிருந்த விரிசல் தினமணிச் செய்தியால் திங்கள்கிழமை சீரமைக்கப்பட்டது.
கமுதியில் அக்டோபா் 30 இல் தேவா் ஜயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி தமிழக முதல்வா், துணைமுதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் வந்தனா். இவா்கள் வருகையையொட்டி சாலைகள் சீரமைக்கப்பட்டன.
கமுதியிலிருந்து பாா்த்திபனூா் வரை சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில் கமுதி ஒற்றைக் கண் பாலம் அருகே கடந்த அக்டோபா் 10 ஆம் தேதி சீரமைக்கப்பட்ட சாலையில் 30 மீட்டா் நீளத்திற்கு விரிசல் ஏற்பட்டது.
சாலை அமைக்கப்பட்டு 20 நாள்களில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். இதுகுறித்து தினமணி நாளிதழில் திங்கள்கிழமை செய்தி வெளியானது. இதனைத் தொடா்ந்து விரிசல் ஏற்பட்ட சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்சியடைந்தனா்.