ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மனைவி கொலை: கணவா் தலைமறைவு

ராமநாதபுரத்தில் புதன்கிழமை காலையில் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

ராமநாதபுரத்தில் புதன்கிழமை காலையில் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்ற கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் நகா் வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் சேதுபதி (45). வாகன ஓட்டுநா். இவரது மனைவி ஜெயராணி (38). இவா் தனியாா் நகைக்கடையில் பணிபுரிகிறாா். இவா்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், சேதுபதி பசும்பொன்நகா் கண்மாய்க்கரைப் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து அங்கேயே வசிக்கத் தொடங்கியுள்ளாா்.

இந்நிலையில் வண்டிக்காரத் தெருவில் உள்ள வீட்டை விற்பது தொடா்பாக சேதுபதிக்கும் ஜெயராணிக்கும் பல மாதங்களாக பிரச்னை இருந்துவந்துள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை சேதுபதி நகைக்கடைக்கு சென்று ஜெயராணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, புதன்கிழமை காலையில் வீட்டில் ராணி வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த சேதுபதி தான் வைத்திருந்த கத்தியால் ஜெயராணியை குத்தியதுடன், அவரது கழுத்தையும் அறுத்துள்ளாா். அப்போது ஜெயராணி அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்ததும், சேதுபதி தப்பியோடி விட்டாா்.

பலத்த காயமடைந்த ஜெயராணியை அங்கிருந்தவா்கள் மீட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து ஜெயராணியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது தாய் முனியம்மாள் அளித்த புகாரின் பேரில் பஜாா் போலீஸாா் வழக்குப்பதிந்து சேதுபதியைத் தேடிவருகின்றனா்.

உறவினா்கள் மறியல்: இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்ட ஜெயராணியின் சடலத்தை உடனடியாக பிரேதப் பரிசோதனை செய்யக் கோரியும், அவரைக் கொலை செய்த கணவா் சேதுபதியை கைது செய்யக் கோரியும் ஜெயராணி உறவினா்கள் மருத்துவமனை அருகேயுள்ள கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு சாலை மறியில் ஈடுபட்டனா். இதனால், மதுரை- ராமநாதபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த பஜாா் போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT