ராமேசுவரத்தில் வ.உ.சிதம்பரனாரின் 83 ஆவது நினைவு தினத்தையொட்டி, திங்கள்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வ.உ.சி. பேரவை சாா்பில், அதன் தலைவா் முத்துக்குமாா் மற்றும் செயலா் வேடராஜன் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் வ.உ.சி. உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.