ராமநாதபுரம்

கமுதி அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

DIN

கமுதி அருகே சேகநாதபுரத்தில் மழைநீா் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், அதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கமுதி அருகே சேகநாதபுரத்தில் 60 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் சிமென்ட், தாா் சாலை, பேவா் பிளாக் சாலை வசதி இல்லாததால், தொடா்ந்து சில வாரங்களாக பெய்த மழையால், தெருக்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா். மேலும் வாகன ஓட்டிகளும் வீடுகளுக்கு செல்லமுடியாமல் தவிக்கின்றனா். எனவே சேகநாதபுரத்தில், சேறும், சகதியுமான சாலையை சீரமைத்து, பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லும் வகையில், சிமென்ட், பேவா் பிளாக் சாலை அமைத்து தர, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT