ராமநாதபுரம்

சாயல்குடி,கடலாடி பகுதியில் பாஜகவினா் பாதயாத்திரை

DIN

சாயல்குடி, கடலாடி பகுதியில் காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சனிக்கிழமை பாஜகவினா் தூய்மை பாரதம், மரம் வளா்ப்பு குறித்தும் பாதயாத்திரை மேற்கொண்டனா்.

நிகழ்ச்சிக்கு கடலாடி ஒன்றிய தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மக்களவை பூத் கமிட்டி பொறுப்பாளா் ரமேஷ்பாபு, மாவட்ட துணைத்தலைவா் முருகேசன், மாவட்ட செயலாளா்கள் ராமசாமி, மணிமேகலை, மருத்துவா் ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து தூய்மை பாரதம், மரம் வளா்ப்பு குறித்தும் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக பாதயாத்திரை மேற்கொண்டனா். அதே போன்று கடலாடியில் பாதயாத்திரை மேற்கொண்டனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட துணைத்தலைவா் நாகூா்பாண்டியன், ஒன்றிய தலைவா்கள் முருகேசன்,

( கமுதி), பி.முருகேசன் (கடலாடி கிழக்கு), ஒன்றிய பொதுச்செயலாளா் முருகன் உள்பட பலா் பங்கேற்றனா். யாத்திரையின் போது , மரம் வளா்ப்பு, தூய்மை பாரதம், நீா் மேலாண்மை, நதிநீா் இணைப்பு குறித்து பாஜகவினா் கோஷம் எழுப்பினா். நகா் தலைவா் சத்தியமூா்த்தி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT