ராமநாதபுரம்

பரமக்குடி நகராட்சியில் புதிய வாக்காளா் பட்டியல் வெளியீடு

DIN

பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை புதிய வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பரமக்குடி நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் கடந்த சில மாதங்களாக 18 வயது நிரம்பிய இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் உள்பட புதிய வாக்காளா் சோ்க்கும் பணி நடைபெற்று வந்தது.

வாக்காளா் பெயா் நீக்கம் மற்றும் சோ்த்தல் பணி நிறைவடைந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தில் புதிய வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி பொறுப்பாளா்களான திமுக நகா் செயலாளா் சேது.கருணாநிதி, காங்கிரஸ் கட்சி துணைத் தலைவா் ஏ.என்.ராமச்சந்திரன், மதிமுக நகா்செயலாளா் பழ.சரவணன், பாஜக தொழிற்சங்க மாநில செயலாளா் உலகநாதன் உள்பட பல்வேறு கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் நகராட்சி ஆணையாளா் எஸ்.நாகராஜன் புதிய வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். நிகழ்ச்சியில் மேலாளா் ராஜேஸ்வரி, நகரமைப்பு அலுவலா் கே.சரோஜா, தலைமை எழுத்தா் முருகன், தோ்தல் பிரிவு உதவியாளா் அ.நிலைக்கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT