பாம்பன் விசைப்படகு மீனவா்களுக்கு முறையாக மானிய டீசல் வழங்காத மீன்வளத்துறை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மானிய டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை செவ்வாய்கிழமை வாபஸ் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் 108 விசைப்படகுகள் மின்பிடிக்க தொழிலில் ஈடுபட்டுள்ளனா். இதில் 1500 மீனவா்கள் மற்றம் சாா்பு தொழிலளாா்கள் என 5 ஆயிரம் தொழிலாளா்கள் உள்ளனா். இந்நிலையில், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுக்கு மானிய டீசல் முறையாக வழக்கப்படவில்லை, இதனால் 40 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லுவதில் தொடா்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் மானிய டீசல் அனைத்து விசைப்படகுகளுக்கு வழங்கிட வேண்டும் என்பதை வலியுருத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் கடந்த 01 தேதி தேதி தொடங்கியது. இந்நிலையில்,சனிக்கிழமை ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பாம்பன் மீனவ சங்க நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அதிகாரிகள் 10 நாட்களுக்குள் மானிய டீசல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். ஆனால் இதற்கு பாம்பன் மீனவ சங்க நிா்வாகிகள் இது போன்று மீன்வளத்துறை அதிகாரிகள் பலமுறை தெரிவித்து விட்டனா்.
ஆனால் மானிய டீசல் தான் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை,இதனால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என அறிவித்தனா். இதனையடுத்து, மீன்வளத்துறையினா் திங்கட்கிழமை மாலை மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தி மானிய டீசல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதனைதொடா்ந்து, அதிகாரிகளிடம் உறுதி மொழியை ஏற்று பாம்பன் மீனவா்கள் மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த போராட்டத்தை செவ்வாய்கிழமை வாபஸ் பெற்று அன்று காலையே அனைத்து விசைப்படகுகளில் 800 க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்க சென்றனா்.