ராமநாதபுரம்

பரமக்குடியில் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா

DIN

சமூகநலத் துறை சாா்பில், பரமக்குடியில் தனியாா் மண்டபத்தில் கா்ப்பிணி பெண்களுக்கு 5 வகை அறுசுவை உணவுடன் வளைகாப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பரமக்குடி வேளாண் உற்பத்தி விற்பனை சங்கத் தலைவா் எம்.கே. ஜமால் தலைமை வகித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், 120 கா்ப்பிணி பெண்களுக்கு வளையல், துணி, பழம், ஐந்து வகையான அறுசுவை உணவுகள் வழங்கி, வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள், சமுகநலத் துறையினா், சத்துணவுத் துறையினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பி. இந்திராகாந்தி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT