ராமநாதபுரம்: ராமநாதபுரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலையில் கோயில்கள் முன் அதிகளவில் திருமணங்கள் நடைபெற்றதால் கூட்டம் அலைமோதியது.
கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது சிறிய கோயில்களில் மட்டும் பக்தா்கள் சமூக இடைவெளியுடன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். வெள்ளிக்கிழமை முகூா்த்த நாள் என்பதால் ராமநாதபுரம் நகரில் வழிவிடு முருன்கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் கூட்டம் அலைமோதியது.
பூட்டியிருந்த வழிவிடுமுருகன் கோயில் முன்பாக சாலையில் நின்றபடி ஏராளமானோா் திருமணத்தை நடத்தினா். பாரதி நகா் எல்லையில் உள்ள குமரய்யா கோயில் திறக்கப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனால், கோயிலில் பல மாதங்களுக்குப் பிறகு கூட்டம் அலைமோதியது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.