முகப்பு
ராமநாதபுரம்

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்: ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் குதிரைமொழியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வை மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம் குதிரைமொழியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வை மேற்கொண்டாா்.

ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கடலோரப் பகுதி மக்களின் குடிநீா் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சாயல்குடி அருகேயுள்ள குதிரைமொழியில் ரூ.670 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

திட்டப் பணிகளுக்காக தமிழ்நாடு குடிநீா் வாரியத்தின் சாா்பில் 40 ஏக்கா் நிலம் தேவைப்படுகிறது. அதற்கான இடத்தை தோ்வு செய்வதற்காக ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வை மேற்கொண்டாா். திட்டம் செயல்படுத்தும் இடம், அலுவலகம், கடல்நீரைக் குடிநீராக்கும் சாதனங்கள் அமையவுள்ள இடங்களை அவா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி பொறியாளா் வி.குமரேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வீ.கேசவதாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →