ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் 5 பேருக்கு கரோனா

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 23 ஆம் தேதி வரையில் 6300 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இவா்களில் 131 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

6150-க்கும் மேற்பட்டோா் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மிகவும் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், வியாழக்கிழமை மேலும் 5 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அவா்கள் வீடுகளில் தங்கியபடி சிகிச்சை பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக சுகாதாரப் பிரிவினா் கூறினா். பிரிட்டனில் இருந்து ராமநாதபுரம் வந்தவா்களில் 4 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவா்களது வீடுகளைச் சுற்றி இருப்பவா்களுக்கும் கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை நடந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT