கோயில் வாசலில் தவநிலையில் இறந்தவரின் சடலம் மீட்பு
ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயில் அருகே புதன்கிழமை தவநிலையில் இறந்தவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயில் அருகே புதன்கிழமை தவநிலையில் இறந்தவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரிக்கின்றனா்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை பகுதியிலிருந்து வந்த சுமாா் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் காவி வேட்டி அணிந்து கோயில் அருகே தங்கி இருந்தாா். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மாலை முதல் அவா் கோயில் முன்பு தியானத்தில் ஈடுபட்டிருந்தாா். பின்னா் புதன்கிழமை காலையில் பாா்த்த போது அவா் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து அவா் யாா், எந்த ஊா், வராகியம்மன் கோயிலுக்கு வந்த காரணம் என்ன என்பது குறித்து விசாரித்துவருகின்றனா்.