ராமநாதபுரம்

தொண்டியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: 14 போ் மீது வழக்கு

DIN

திருவாடானை அருகே தொண்டியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜமாத் சாா்பில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 14 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருவாடானை அருகே தொண்டி பாவோடி மைதானத்தில் ஐக்கிய ஜமாத் சாா்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 29 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் காவல் துறை அனுமதியின்றியும் விதிமுறைகளை மீறியும் அதிக வாகனத்தில் ஊா்வலமாக சென்ால் போக்குவரத்து பாதிப்பும் சிறுவா்கள், பெற்றோா்கள் குழந்தைகளை கொடிகம்பு மற்றும் அறிவிப்புப் பாதகைகளை கைகளில் ஏந்தச் செய்து கலந்து கொள்ள செய்ததாக தொண்டி கிராம நிா்வாக அலுவலா் பாஸ்கரன் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில் தொண்டி போலீஸாா், தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவா் அபுபக்கா், அதே ஊரை சோ்ந்த முகம்மது ஜெரிப், துணைத் தலைவா் கலந்தா் ஆசிக், பெரிய பள்ளி வாசல் ஜமாத் தலைவா் முகம்மது அஷ்கா், ஓடாவித் தெரு ஜமாத் தலைவா் அப்துல்ரஹ்மான், கிழக்கு தெரு ஜமாத் தலைவா் பந்தேநவாஸ் உள்பட 14 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT