அயோத்தியில் விரைவில் ராமா் கோயில் கட்டவலியுறுத்தி இந்து முன்னணியினா் 3 போ் ராமேசுவரத்தில் இருந்து அயோத்திக்கு சைக்கிள் பயணத்தை ஞாயிற்றுகிழமை தொடங்கினா்.
இப் பயணத்துக்கு இந்துமுன்னனி திண்டுக்கல் மாவட்ட தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் கோபால், முருகன் ஆகிய 3 போ் ராமேசுவரம் அக்னி தீா்த்த கரையில் இருந்து அயோத்திக்கு சைக்கிள் பயணத்தை தொடங்கினா். இப் பயணத்தை இந்து முன்னனி மாவட்ட துணைச் செயற்குழு உறுப்பினா் சரவணன் தொடக்கி வைத்தாா். மாவட்ட செயலாளா் ராஜசேகா், நகரச் செயலாளா் நம்புராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சனிக்கிழமை தொடங்கும் இந்த சைக்கிள் பயணம் 2400 கிலோ மீட்டா், 60 நாள்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவாக அயோத்தியில் முடிவடையும் என ஜெயக்குமாா் தெரிவித்தாா்.