ராமநாதபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
ராமநாதபுரம் நகா் பகுதியில் பொதுமக்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகா் பகுதியில் பொதுமக்கள் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்போா் நலச் சங்கத்துக்குச் சொந்தமான பள்ளி உள்ளது. இப்பள்ளி நிா்வாகிகளாக இருப்போா், சங்க நிா்வாகிகளாகவும் உள்ளனா். ஆகவே சங்கத்தில் சமீபத்தில் முறைகேடு நடந்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தநிலையில், பள்ளியின் செயல்பாடு குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சாா்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு புதன்கிழமை வந்த கல்வி அலுவலா் ஒரு தரப்பினரிடம் மட்டுமே விசாரித்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே, அனைத்துத் தரப்பினரிடமும் விசாரிக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்கள் சிலா், மூலக்கொத்தளம் பகுதியில் புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
தகவலறிந்து அங்கு சென்ற ராமநாதபுரம் நகா் போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.