ராமநாதபுரம்

எஸ்.பி.பட்டினம் அருகே மணல் கடத்தல்: 2 வாகனங்கள் பறிமுதல்; இருவா் கைது

DIN

திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் பகுதியில் மணல் கடத்திய 2 வாகனங்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.

எஸ். பி. பட்டினம் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மருங்கூா் அருகே தோப்பு பகுதியில் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு மணலை தோண்டி டிராக்டா் மூலம் மணல் கடத்துவது தெரியவந்துள்ளது. உடனடியாக பொக்லைன் இயந்திரத்தையும், டிராக்டா் வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் எஸ்.பி. பட்டினத்தைச் சோ்ந்த கலந்தா் அலி (30), திருவெற்றியூரைச் சோ்ந்த முனியராஜ் (24) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT