ராமநாதபுரம்

கடல் நீரும் மீனவர்களின் கண்ணீரும் 

ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டு பகுதி. 1750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள்,

ஜெ. முருகேசன்

ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டு பகுதி. 1750 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள், இயந்திரம் இல்லாமல் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ரக படகுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். 

பாரம்பரிய கரைவலை, ஓலைவலை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லுகின்றனர். இதில் ஓலைக்குடா, சேராங்கோட்டை, நடராஜபுரம், ராமகிருஷ்ணபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் யாருடைய உதவியும் இன்றி ஒருவர் மட்டுமே தெர்மாகூல் படகில் சென்று 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். காலை 10  மணிக்கு தெர்மாகூல் படகை எடுத்துக்கொண்டு மூன்று கடல் மைல் தொலைவுக்கு கடலுக்குள் சென்று அரை மீட்டர் நீலமுள்ள சிறிய ரக வலையை கடலில் போட்டு விட்டு  கரைக்கு திரும்பி விடுகின்றனர்.

 பின்னர் அதிகாலை 03 மணிக்கு தெர்மாகூல் படகில் சென்று போடப்பட்டுள்ள வலையில் சிக்கி உள்ள மீன், நன்டு மற்றும் கனவாய் தூண்டி மூலம் கனவாய் பிடித்து வருகின்றனர். இதில் குறைந்த பட்சம் ரூ 300 முதல் ரூ 500 வரை மீன்களை பிடித்து கரைக்கு வந்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர்.  இந்த மீனவர்கள் நாள் தோறும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று மீன்பிடிப்பதை தொழிலாக செய்கின்றனர். 

இது குறித்து மீனவர் சிங்கராயன் கூறுகையில்: ராமேசுவரம் தீவுப்பகுதியில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட மீனவாகள் தெர்மாகூல்  படகில் சென்று மின்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் தங்களிடம் போதிய பண வசதி இன்றி தெர்மாகூல் படகில் சென்று மீன்பிடிக்க செல்லுவதாகவும், தங்களுக்கு பைபர் படகுகள் தமிழக அரசு மானியத்துடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT