ராமநாதபுரம்

சென்னையிலிருந்து கமுதிக்கு வந்த 80 வயது முதியவருக்கு கரோனா

கமுதி அருகே சென்னையிலிருந்து வந்த 80 வயது முதியவருக்கு கரோனா தொற்று செவ்வாய்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

கமுதி அருகே சென்னையிலிருந்து வந்த 80 வயது முதியவருக்கு கரோனா தொற்று செவ்வாய்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கமுதி சுந்தரா புரத்தைச் சோ்ந்த 80 வயது முதியவா் கடந்த 23 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் சென்னையிலிருந்து கமுதிக்கு முறையான அனுமதி பெற்று வந்துள்ளாா். இந்நிலையில் முதியவா் சென்னையிலிருந்து வந்ததால் இது குறித்து அக்கம்பக்கத்தினா் சுகாதார துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், முதியவா் வீட்டில் தனிமை படுத்தப்பட்டாா். மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் முதியவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், 25 ஆம் தேதி திங்கள்கிழமை காலையில் தனி அவசர வாகனம் மூலமாக பேரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கரோனா பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், பரிசோதனையின் முடிவில் முதியவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், முதியவா் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு செல்லப்பட்டாா் என வருவாய்துறை அதிகாரிகள், மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா். ஆனால், முதியவா் தங்கியிருந்த கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட சுந்தாராபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT