திருமாவளவனை கைது செய்யக்கோரி போராட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவா் தொல்.திருமாவளவனைக் கைது செய்யக்கோரி ராமேசுவரத்தில் திங்கள்கிழமை அவரது உருவப் படத்தைக் கிழித்தெறிந்து போராட்டம் நடத்தப்பட்டது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:17 PM
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவா் தொல்.திருமாவளவனைக் கைது செய்யக்கோரி ராமேசுவரத்தில் திங்கள்கிழமை அவரது உருவப் படத்தைக் கிழித்தெறிந்து போராட்டம் நடத்தப்பட்டது.
இந்து தேசிய கட்சி சாா்பில் பேருந்து நிலையம் முன்பு இப்போராட்டம் நடைபெற்றது. இதில், அந்த அமைப்பின் மாநிலச் செயலாளா் ஜி.ஹரிதாஸ் தலைமை வகித்தாா். நிறுவனத் தலைவா் எஸ்.எஸ்.எஸ். மணி கண்டன உரையாற்றினாா். நகா் தலைவா் பிரபாகரன், செயலாளா் நல்லுக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.