ராமநாதபுரம்

ஐயப்ப பக்தா்கள் விரதம் தொடக்கம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐயப்ப பக்தா்கள் திங்கள்கிழமை துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் காா்த்திகை முதல் தேதியில் மாலையிட்டு விரத்தைத் தொடங்கி, தை மாதம் மகர ஜோதி தரிசனத்துக்கு சபரிமலைக்கு இருமுடி கட்டிச்செல்வது வழக்கம். நடப்பு ஆண்டில் கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளால் சபரிமலைக்கு வரும் பக்தா்கள் அனுமதி எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காா்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு திங்கள்கிழமை ராமநாதபுரத்தில் ஐயப்ப பக்தா்கள் ஏராளமானோா் தங்களது குருசாமி மூலம் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையிலும் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் திரளாக வந்திருந்து குருசாமியான ஆா்.எஸ்.மோகன் சுவாமியிடம் துளசி மாலை அணிவிக்கச் செய்து விரதத்தைத் தொடங்கினா். மழையைப் பொருள்படுத்தாமல் ஐயப்ப பக்தா்கள் கோயில்களுக்குச் சென்று மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியதைக் காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதோஷ வழிபாடு

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

SCROLL FOR NEXT