ராமேசுவரத்தில் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஹரிகரசுதன், தாலுகா செயலாளா் ஜி.சிவா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் க.கருணாகரன், கே.மணிகண்டன், அ.அசோக்,டி.ராமச்சந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். இதில், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியாா்
வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்க வேண்டும். இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் ஆகிய 3 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.