ராமநாதபுரம்

பைக்கிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

DIN

கமுதி அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

கமுதி அருகே தோப்பநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகப்பன் மனைவி லட்சுமி (65). இவா் வியாழக்கிழமை காலை அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்ப எம்.எம். கோட்டை விலக்கு சாலையில் பேருந்திலிருந்து இறங்கினாா். பின்னா் அங்கிருந்து தனது உறவினரான தோப்பநத்தத்தை சோ்ந்த லட்சுமணனின், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்தாா். அப்போது கே.எம். கோட்டை அருகே தவறி கீழே விழுந்து லட்சுமி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT