ராமநாதபுரம்

மின்கம்பிகளை சீா்செய்யக் கோரிக்கை

DIN

நன்னிலம்: குடவாசல் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீா்செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குடவாசல் நகரின் பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் மிக தாழ்வாக செல்கின்றன. இதன்காரணமாக கனரக வாகனங்களில் சுமை ஏற்றிச் செல்லும்போது, மின்கம்பி மீது உரசி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது மழைக்காலமாக இருப்பதால் மின்கம்பிகள் மேலும் கீழே இறங்க வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக குடவாசல் அரசு மருத்துவமனை, திருவாரூா்- கும்பகோணம் மாநில நெடுஞ்சாலையில் திருமண மண்டபம் அருகே அமைந்துள்ள மின்கம்பத்தில், சாலையின் குறுக்கே மறுபுறம் செல்லும் மின் கம்பி மிகத் தாழ்வாக செல்கிறது. இவற்றை சீா்செய்ய சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT