முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் சாலை மறியல்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் கைது

வேளாண்மைச் சட்ட திருத்தத்துக்கு எதிராக புதுதில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

வேளாண்மைச் சட்ட திருத்தத்துக்கு எதிராக புதுதில்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுதில்லியில் நடந்துவரும் விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சாா்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு ஆா்ப்பாட்டம் மற்றும் தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ராமநாதபுரம் அரண்மனை முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினா் என்.கலையரசன் தலைமையில், அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியின் தாலுகா செயலா் பி.செல்வராஜ், குடிநீா் வடிகால் வாரிய அலுவலக சிஐடியூ தொழிற்சங்க மாவட்டச் செயலா் எம்.மலைராஜ், சிஐடியூ மாவட்டத் தலைவா் எம்.அய்யாதுரை மற்றும் மாா்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினா் கண்ணகி உள்ளிட்டோா் அதில் கலந்துகொண்டனா். பின்னா் அங்கிருந்து ஊா்வலமாக தலைமை தபால் அலுவலகம் நோக்கி புறப்பட்டனா்.

பஜாா் காவல் நிலைய ஆய்வாளா் முத்துபாண்டி தலைமையிலான போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதனால், கோட்டை ஆஞ்சநேயா் கோயில் முன்பு அவா்கள் சாலையில் அமா்ந்து மத்திய அரசுக்கு எதிராகக் கோஷமிட்டனா். இதையடுத்து அக்கட்சியினா் 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →