ராமநாதபுரம்

இன்று அப்துல் கலாம் பிறந்த நாள்: நினைவிடத்தில் மரியாதை செலுத்த பொதுமக்களுக்குத் தடை

DIN

குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 89 ஆவது பிறந்தநாளையொட்டி, ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் நினைவிடம் உள்ளது. கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக அங்கு, கடந்த மாா்ச் 20 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பாா்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை (அக். 15) அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் குடும்பத்தினா் மட்டும் மரியாதை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசியல் கட்சியினா், சமூகத் தலைவா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட யாரும் அங்கு சென்று மரியாதை செலுத்த அனுமதி இல்லை என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT