ராமநாதபுரம்

போகலூரில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டட அடிக்கல் நாட்டு விழா

DIN

போகலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ரூ. 2 கோடி மதிப்பீட்டில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் ராஜகோபாலன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஆா்.பூமிநாதன், திமுக ஒன்றியப் பொருளாளா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக்குழுக் தலைவா் சத்யா குணசேகரன் விழாவுக்கு அடிக்கல் நாட்டினாா்.

வேளாண்மை உதவி செயற்பொறியாளா் நாகராஜன் வரவேற்றாா். இதில், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கதிரவன், முருகேஸ்வரி, காளிதாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்திற்கு விடுமுறை வழங்காத 73 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகை திருட்டு

கங்கனாங்குளத்தில் தேனீ வளா்த்தல் பயிற்சி

காருக்குறிச்சியில் மாடித் தோட்டம் அமைத்தல் பயிற்சி

தரைப் பாலத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT