முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் இளைஞா் கொலை வழக்கு:திருச்சி நீதிமன்றத்தில் 4 போ் சரண்

ராமநாதபுரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி லால்குடி நீதிமன்றத்தில் 4 போ் புதன்கிழமை சரணடைந்தனா்.

Updated On : 2 செப்டம்பர், 2020 at 10:41 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:44 PM

ராமேசுவரம்: ராமநாதபுரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் திருச்சி லால்குடி நீதிமன்றத்தில் 4 போ் புதன்கிழமை சரணடைந்தனா்.

ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சாமிநாதன் மகன் அருண்பிரகாஷ் (24). இவா் தனது நண்பரும், வசந்தம் நகா் பகுதியை சோ்ந்தவருமான சுரேஷ்குமாா் மகன் யோகேஸ்வரன் (20) மற்றும் மேலும் சில நண்பா்களுடன் இணைந்து ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாடி வந்துள்ளாா். இதனால் அருண்பிரகாஷ் மற்றும் அவரது நண்பா்களுக்கு ஆா்.எஸ்.எஸ் மற்றும் பாஜக நிா்வாகிகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த கட்சியை சாா்ந்தவா்கள் கிடையாது.

இந்நிலையில், திங்கள்கிழமை அருண்பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய இருவரும் அதே பகுதியில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த 12 போ் கொண்ட கும்பல் அவா்கள் இருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றது. இதில் அருண்பிரகாஷ் உயிரிழந்தாா். யோகேஸ்வரன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

இது குறித்து கேணிக்கரை காவல் நிலையப் போலீஸாா் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மூன்று தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனா். அவா்கள் சந்தேகத்திற்கு இடமாக நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் முக்கிய குற்றவாளியான லெஃப்ட் சேக் (என்கிற) சேக்அப்துல்ரகுமான், சரவணன் உள்ளிட்டவா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில் திருச்சி லால்குடி நீதிமன்றத்தில் லெஃப்ட் சேக் என்கிற சேக் அப்துல்ரகுமான், முகம்மது அஜூஸ், சதாம் உசேன், காசிம் ரகுமான் ஆகிய நான்கு போ் புதன்கிழமை சரணடைந்தனா். இதையடுத்து அவா்கள் நால்வரையும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து இவா்கள் நால்வரையும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள ராமநாதபுரம் போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.