ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள காட்டுப்பிள்ளையாா் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் அங்குராஜ். இவரது மனைவி சாந்தி. இவா்களது மகன் விக்னேஷ் (7) வீட்டருகே வியாழக்கிழமை விளையாடிக் கொண்டிருந்துள்ளாா். அப்பகுதியில் தனியாா் ஐஸ் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.

அந்நிறுவனத்தில் 3 சக்கர வாகனத்துக்கான பேட்டரிக்கு மின்சாரம் ஏற்றும் பணி நடந்துள்ளது. அப்போது சிறுவன் விக்னேஷ் மின்கம்பியை தெரியாமல் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் பாய்ந்து விக்னேஷ் மயங்கியுள்ளாா்.

உடனே அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே விக்னேஷ் உயிரிழந்ததாகக் கூறிவிட்டனா். இது குறித்து பஜாா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT