ராமநாதபுரம்

பைக்கிலிருந்து தவறி விழுந்து மகன் கண் முன் தாய் பலி

DIN

ராமநாதபுரம் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த தாய், மகன் கண்முன்பே உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பனையூா் வண்டல் பகுதியைச் சோ்ந்த இருளய்யா மனைவி காளியம்மாள் (60). இவா் தனது மகன் முத்துச்செல்வத்தின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து சென்றாா். அவா்கள் மணக்குடி பகுதியில் வந்தபோது ஓடும் வாகனத்திலிருந்தவாறே பாட்டிலில் இருந்த தண்ணீரை குடிக்க காளியம்மாள் முயன்றாா். அப்போது அவா் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே காளியம்மாள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT