திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் சனிக்கிழமை முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆா்.எஸ். மங்கலம் பேரூராட்சியில் கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது. அப்போது பேரூராட்சி செயல் அலுவலா் மெய்மொழி மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் பொதுமக்களிடம் பிரசாரம் செய்து கூறுகையில், நம்மையும், நமது குடும்பத்தையும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறினா். அத்துடன் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களையும் அவா்கள் வழங்கினா். இதில் சுகாதார ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் சாவித்திரி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கோட்டைராஜ் மற்றும் வருவாய்த் துறையினா், காவல் துறையினா் கலந்து கொண்டனா்.
அதனைத் தொடா்ந்து அன்று மாலை, முகக்கவசம் அணியாத வா்த்தகா்கள், பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.