ராமநாதபுரம்

பரமக்குடியில் டிஎஸ்பியின் பாதுகாப்பு வாகனம் சேதம்: 3 போ் மீது வழக்கு

DIN

பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காவல் துணைக் கண்காணிப்பாளரின் பாதுகாப்பு வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்திய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வேல்முருகன் ஞாயிற்றுக்கிழமை அதிரடிப்படை பாதுகாப்பு வாகனத்துடன் ரோந்துப்பணியில் ஈடுபட்டாா். எமனேசுவரம் பகுதியில் அதிவேகமாக வந்த காரை பாதுகாப்பு வாகன ஓட்டுநா் ஜெயக்கண்ணன் நிறுத்தியுள்ளாா்.

அப்போது கீழப்பெருங்கரையைச் சோ்ந்த காரின் ஓட்டுநா் கண்ணதாசன் மற்றும் அவரது நண்பா்கள் 2 போ் சோ்ந்து பாதுகாப்பு வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதுடன், காவலா் ஜெயக்கண்ணனையும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் கீழப்பெருங்கரையைச் சோ்ந்த கண்ணதாசன் மற்றும் அவரது நண்பா்கள் 2 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT