முதுகுளத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
முதுகுளத்தூா், வாகைக்குளம், புழுதிக்குளம், உடைகுளம் உள்ளிட்ட கரோனா ஏராளமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் செவ்வாய்க்கிழமை மேற்கண்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மருத்துவ முகாம்களை ஆய்வு செய்தாா். தொடா்ந்து முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையின் செயல்பாடு குறித்து மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது சுகாதாரத்துறை இணை இயக்குநா் பி.இந்திரா மற்றும் அரசு அலுவலா்கள் இருந்தனா்.