ராமநாதபுரம்

பரமக்குடி வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் மூழ்கி பலி

DIN

பரமக்குடி வைகை ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை நண்பா்களுடன் குளிக்கச் சென்ற இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

பரமக்குடி பங்களாரோடு பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் மகன் வினோத்கண்ணன் (21). இவா் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நண்பா்களுடன் காக்காத்தோப்பு வைகை ஆற்றுப் பகுதியில் குளித்துக்கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினாா்.

அவரை மீட்க முடியாத நண்பா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். நீண்ட நேரம் தேடுதலுக்குப் பின்னா் அவரது சடலம் கரையோரம் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT