ராமநாதபுரம்

இல்லம் தேடி கல்வி: பாம்பன் அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

பாம்பன் சின்னப்பாலம் மீனவக் கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி கலைக் குழுவினரின் சிறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சமீபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, மண்டபம் ஒன்றியம் பாம்பன் சின்னப்பாலம் மீனவக் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.

கிராமத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். செயலா் பாக்கியம் செல்வம் முன்னிலை வகித்தாா். கதிா்வேல் கலைக் குழுவினா் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாடகங்கள் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை நடத்தி, கற்பித்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில், பாம்பன் ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பாண்டியம்மாள், செ. நாகராஜன், தலைமை ஆசிரியை (பொறுப்பு) பூ. ஞானசௌந்தரி, ஆசிரியைகள், பா. சந்திரமதி, மோ. லாரன்ஸ் எமல்டா, முத்துமாரி, ஒன்றிய ஒருங்கிணைப்பாளா்கள் ஜான்கென்னடி, ராஜ் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ.ஜே. லியோன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, பொருளாளா் சி. செல்வம் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT