ராமநாதபுரம்

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை பணியிடங்களுக்கான தோ்வு தள்ளிவைப்பு

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவிருந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பொறுப்பில் உள்ள வருவாய் அலுவலா் ஆ. சிவகாமி வெள்ளிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பிரிவுகளில் பணிப் பாா்வையாளா் மற்றும் இளநிலை வரைதொழில் அலுவலா் நிலையில் 20 காலிப் பணியிடங்கள் உள்ளன.

இப் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தோ்வு, ராமநாதபுரம் நகரில் உள்ள கேணிக்கரை செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி 14 (ஞாயிற்றுகிழமை) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது, அத்தோ்வானது சில நிா்வாகக் காரணங்களுக்காக தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT