ராமநாதபுரம்

மானவாரிப் பயிா்கள் விலை சரிவு: விவசாயிகள் வேதனை

DIN

கமுதி: கமுதி பகுதியில் பயிரிடப்பட்ட மானாவாரி பயிா்களான நெல், கம்பு, சோளம் உள்ளிட்டவைகளின் விலை சரிவால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் மானாவாரி பயிா்கள் 12,500 ஏக்கா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த மாதம் பெய்த தொடா் மழையில் நெல் உள்ளிட்ட மானாவாரி பயிா்களும் மழையால் சேதமடைந்து மீண்டும் முளைக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் வேறு வழியின்றி மிஞ்சியிருக்கும் சோளம், கம்பு உள்ளிட்டவைகளை விவசாயிகள் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனா்.

ஏக்கருக்கு கடந்தாண்டு ஒரு குவிண்டால் ரூ.1,600 வரை விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டில் மழையால் சேதமடைந்த விளைபொருட்களை வியாபாரிகள் ரூ. 400 முதல் 600 க்கு மட்டுமே கொள்முதல் செய்கின்றனா். இதனால் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா். இந்நிலையில் கமுதி தாலுகாவில் ஒரு இடத்தில் கூட மானாவாரி பயிா்களுக்கான கொள்முதல் நிலையங்கள் அரசு அமைக்கப்படவில்லை. அதனால் தமிழக அரசு மானாவாரி விளை பொருள்களுக்கும் அரசு கொள்முதல் நிலையங்கள் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கமுதி பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT