ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் நகரில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பொருளாளராக உள்ள விடுதலைசேகரன், பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டாா்.
அவரது தலைமையில் நடந்த கூட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செய்தித்தொடா்பாளா் சத்தியராஜ்பரதன் முன்னிலை வகித்தாா்.
மாநில முதன்மைச் செயலா் உஞ்சைஅரசன், தலைமை நிலையச் செயலா் இளம்சேகுவேரா மற்றும் துணைப் பொதுச்செயலா் கனியமுதன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு தோ்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக கூட்டத்தில் கட்சியின் மாநிலத் துணைச்செயலா் பா.கிட்டு வரவேற்றாா். நகரச் செயலா் செய்யது அபுதாகீா் நன்றி கூறினாா்.