ராமநாதபுரத்தில் ஊரக வளா்ச்சித்துறையினா் புதன்கிழமை (பிப்.24) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாவட்டச் செயலா் கி.சோமசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவேண்டும், சங்கத்தின் முன்னாள் நிா்வாகிகள் மீதான துறைரீதியான நடவடிக்கையை கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம் என்று தெரிவித்துள்ளாா்.
ராமநாதபுரத்தில் ஏற்கெனவே வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது ஊரக வளா்ச்சித் துறையினா் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.