கமுதி: கமுதி அருகே வெள்ளிக்கிழமை, இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா்.
கமுதி அருகே கீழராமநதியைச் சோ்ந்தவா் அஜீஸ்கான் மகன் சிந்தாமிதாா் (30). இவா் கமுதியில் உள்ள ஒரு உணவகத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவரது நண்பா் அப்தாகீா் (24). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு கீழராமநதியிலிருந்து கமுதி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது கமுதியிலிருந்து வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் சிந்தாமிதாா் சம்ப இடத்திலேயே உயிரிழந்தாா். அப்தாகீா் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான மேலூரை அடுத்துள்ள மேலவளைவு கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் பாலகிருஷ்ணனை (49) கைது செய்தனா்.