கே. வேப்பங்குளத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம்
கமுதி அருகே கே. வேப்பங்குளத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கமுதி அருகே கே. வேப்பங்குளத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு கமுதி மத்திய ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றிய செயலா் மனோகரன், தெற்கு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 10 ஆண்டுகளாக கிராமத்திற்கு காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் வரவில்லை எனவும், கமுதி- வேப்பங்குளம் சாலையை அகலப்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அப்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என திமுகவினா் தெரிவித்தனா்.