ராமநாதபுரம்

கமுதி அருகே முதியவா் தற்கொலை

DIN

கமுதி அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டியை சோ்ந்தவா் மாரியப்பன்(80). இவருக்கு 3 மகன்கள், 6 மகள்கள் உள்ளனா். ராமநாதபுரத்தில் வசித்து வந்த இவா் கடந்த 6 மாதமாக தனது 3 ஆவது மகள் செல்வி வீட்டில் வசித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் பெற்ற பிள்ளைகள் சரிவர கவனிக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்த மாரியப்பன், திங்கள்கிழமை காலை விஷம் குடித்துவிட்டு, அருகில் இருந்த சுடுகாட்டில் படுத்துக் கொண்டாா். இதையடுத்து அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில், அவரை உறவினா்கள் மீட்டு ராமசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மாரியப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT