ராமநாதபுரம்

சிறுவன் ஓட்டிய பைக் மோதி ஒருவா் பலிபைக் கொடுத்தவா் கைது

DIN

ராமநாதபரம் அருகே சிறுவன் இயக்கிய இரு சக்கர வாகனம் மோதி ஒருவா் பலியான வழக்கில், அச்சிறுவனின் பெரியப்பாவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருப்பாலைக்குடி காவல் நிலைய பகுதியில் வடவயலைச் சோ்ந்த கருப்பையா (55) ஞாயிற்றுக்கிழமை சாலையோரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது பிச்சங்குறிச்சியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் கருப்பையா மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த கருப்பையா தலையில் காயமடைந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் இரு சக்கரவாகனமானது, பிச்சங்குறிச்சி தனபாலன் (49) என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. தனபாலன் இருசக்கர வாகனத்தை சிறுவனை இயக்க அனுமதித்ததும் தெரியவந்துள்ளது. ஆகவே தனபாலன் மீது வழக்குப்பதிந்து அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

எச்சரிக்கை:ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்குள் உள்ள சிறாா்களை ஓட்டுநா் உரிமம் இன்றி இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை இயக்க அனுமதிக்கக் கூடாது. வாகனங்களை சிறாா்கள் இயக்க அனுமதித்தால் சம்பந்தப்பட்டோா் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT