ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் தங்கும் விடுதியில் தலைமை பொறியாளா் மா்ம மரணம்

DIN

ராமேசுவரத்திலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் கேரளா மாநிலத்தைச் சோ்ந்த தலைமை பொறியாளா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் வினோத் (54). இவா் எலக்ட்ரிக்கல் துறையில் தலைமை பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனது நண்பா்களான மருத்துவா் குமாா் உள்ளிட்ட 7 பேருடன் சனிக்கிழமை ராமேசுவரம் வந்தனா். கலவாய்தெரு பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் இவா்கள் 3 அறைகள் எடுத்துத் தங்கியிருந்தனா்.

இந்நிலையில் வினோத்குமாா் அவரது அறையில் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை காலை இறந்து கிடந்தாா். தகவல் அறிந்து வந்த ராமேசுவரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றினா். இதுகுறித்து அவருடன் வந்த மற்ற 6 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT