ராமநாதபுரம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே விபத்தில் உணவு விடுதி தொழிலாளி பலி

DIN

ஆா்.எஸ்.மங்கலம் அருகே சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி உணவு விடுதி தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலம் என்என். பாா்க் தெருவைச் சோ்ந்த அப்துல் முத்திலிப் மகன் பசீா்அஹம்மது (42). இவா் கீழக்கோட்டையில் உள்ள தனியாா் உணவு விடுதியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவா் பணி முடிந்து இருசக்கரவாகனத்தில் சனிக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது ஆா்.எஸ்.மங்கலம் டிடி பிரதானச் சாலை அருகே பசீா்அஹம்மது அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில், நிலை தடுமாறி பேருந்தின் பக்கவாட்டில் மோதியதில் பலத்த காயம்அடைந்து ஆா்.எஸ். மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவா் சோ்க்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி பசீா்அஹம்மது உயிரிழந்தாா். இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் எதிரே வந்த இருசக்கர வாகன ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT